…ஒரே தருணத்தில் இந்த வாழ்க்கை எவ்வாறு மாறக்கூடும் மற்றும் விஷயங்கள் உங்களுக்கு எதிராக எப்படி மாறும்.இதை பற்றியதே இந்த சின்ன விஷயங்களின் கடவுள்.
சமூக பொருளாதார சிக்கல்கள், கம்யூனிசத்தின் திண்டாட்டம் , பேரினவாத சமூகம், அருவருப்பான சாதி கோட்பாடு, சாதி ஒடுக்குமுறை,சிறுவர் துஷ்பிரயோகம், ஏகாதிபத்தியம், பாலியல் சுரண்டல் என்று நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற எல்லா பிரச்சனைகளுமே இந்த புத்தகத்தில் ஆற்றல் மிகுந்த வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது.
எத்தனையோ முறை கேரளாவை நேரில் கண்டிருந்த போதும் இந்த புத்தகத்தில் ராய் அவர்கள் காட்டி இருக்கும் கேரளாவின் வனப்பும் நேர்த்தியும் அதிகம்.
மொழிபெயர்ப்பை பாராட்டியே ஆகவேண்டும். மொழி மாற்றம் என்று மட்டுமல்லாமல் உணர்வு பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார் ஜி. குப்புசாமி அவர்கள்…