வாசகரிடமிருந்து ஒரு கடிதம்
அன்புடையீர்,
தங்கள் காலச்சுவடு வெளியீடான உ.வே.சாவின் ‘என் சரித்திரம்’ புத்தகம் தென்காசி புத்தகத் திருவிழாவில் வாங்கி வாசித்து முடித்துள்ளேன்.
புத்தகத்தின் அமைப்பு, அட்டைப் படங்கள், அனைத்தும் அழகு! புத்தகம் 998 பக்கங்கள் இருப்பினும் தரமான அச்சு எழுத்துக்களில் உயர்ந்த காகிதத்தில் அச்சிடப்பட்டு தெளிவான புகைப்படங்களுடன் வெளியீட்டுள்ளீர்கள். ஒரு உயர்ந்த தமிழ் மகனுக்கு புகழ் சூட்டும் நிலையில் பிறந்துள்ள இப்புத்தகத்தின் தங்கள் வெளியீடு A1 என்றுதான் கூற வேண்டும்.
சு. கருப்புசாமி
செங்கோட்டை