கோனி பால்மனின் ‘என் கதை உன் கதை’ நாவல் பார்வை
”நேசத்தின் அமிர்தமும் வெறுப்பின் நஞ்சும்”
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்த பெண்ணிய அலையின் அடையாளங்களில் ஒன்று கவிஞர் சில்வியா பிளாத். ஆத்மாநாமைப் போலவே வாழ்வையும் மரணத்தையும் பிரிக்க இயலாத வாழ்க்கை சில்வியா பிளாத்துடையது. 30 வயதுகளில் தற்கொலை செய்துகொண்ட சில்வியா பிளாத்துக்கும் அவரது கணவரும் நோபல் பரிசு பெற்ற கவிஞருமான டெட் ஹ்யூக்ஸ்க்கும் இடையிலான காதல், திருமண வாழ்க்கை மீதான புனைவு இது... டச்சு எழுத்தாளர் கோனி பால்மன், இரண்டு பேராளுமைகளான இக்கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆராய்ந்து எழுதிய நாவல் இது. நேசத்தின் ஆழமான அமிர்தமும், வெறுப்பின் நஞ்சும் கலந்த அவர்களின் காதல் உறவை கோனி பால்மன் அபாரமாக புனைவில் சாதித்துள்ளார். இதுபோன்ற நஞ்சும் அன்பும் காமமும் கலந்த உறவுகளை அனுபவித்தவர்களுக்கு இந்த நாவல் மேலும் அர்த்தங்களை விரிக்கலாம்..மொழிபெயர்ப்பாளர் அரவிந்தன் சிக்கலான இந்தப் படைப்பை மலினப்படுத்தாமலேயே தமிழுக்குக் கடத்தியுள்ளார்.
நன்றி: ஷங்கர்ராமசுப்ரமணியன் (x தளப் பதிவிலிருந்து)
முழுமையாகப் பார்க்க: