Your cart is empty.
9 May 2026
சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை – நாவல்
”ஊர் வளர்ந்தது... அரசியல் வந்தது... அந்தப் புளியமரம் என்னவானது?”
இந்த முழு நாவலுமே ஒரு புளியமரத்தின் கதை. நாகர்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய புளியமரம் இருக்கிறது. ஒரு ஆசான் (நாவலில் வரும் ஆசான், வேறு எந்த ஆசானையும் நினைக்காதீர்கள்) சிறு பையன்களுக்குக் கதை சொல்கிறார். அந்தப் புளிய மரத்தை வெட்டுவதிலிருந்து தான்தான் காப்பாற்றியதாகச் சொல்கிறார். இது கதையா, உண்மையா தெரியவில்லை. காலக்கிரமத்தில் அந்தப் பகுதி வளர்கிறது, புளிய மரத்து பஸ் ஸ்டாண்டாகிறது, வியாபாரங்கள் பெருகின்றன; ஊர் விரிகிறது.
முனிசிபாலிடி தேர்தலும் வருகிறது. தேர்தல் எப்படி ஊரைப் பிரிக்கிறது, முனிசிபாலிடியின் தீர்மானமே அந்த மரத்தை வெட்டுவதுதான், நிறைவேறுகிறதா, இல்லையா என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
அற்புதமான நாவல். நிறைய பாத்திரப் படைப்புகள். சிறப்பாக நாவலை வளர்த்துகிறார். எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நன்றி: ரத்ன வேல் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: