Your cart is empty.
None
நான்கு வருடங்களுக்கு முன் 'உடைந்த குடை'க்கு குமார் அம்பாயிரம் எழுதிய விமர்சனப் பதிவு. இதை அப்போது படித்தபோது மகிழ்ச்சியடைந்தேன். இப்போது மெமரீஸில் வருகிறபோது மனம் உடைகிறேன்.
குமார் காலமாகி ஒரு வருடமாகிவிட்டது.
சௌகர்யமான வாழ்வை சிதைத்துக் கொள்வதிலிருந்து தான் தீவிரமான இருத்தல் துவங்குகிறது...
எலியாஸ் ருக்லா என்கிற உயர்நிலை பள்ளியில் இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றும் ஒருவரின் பள்ளிக்கு கிளம்பும் காலையில் துவங்கி மதியத்திற்குள்ளாகவே நாவல் அதன் புற அமைப்பில் முடிந்து போனாலும் நனவோடை உத்தியிலும் அகத்தில் எழும் கொந்தளிப்பான குரலிலும் நார்வேஜிய வாழ்வை எழுதிச் செல்கிறது.இப்சனின் காட்டு வாத்து நாடகத்தை விரித்துரைப்பதிலிருந்து நமக்கு நம் வாசிப்பு நினைவுக்கு டாக்டர்.ரெல்லிங் பற்றியதான விரித்துரைப்பும் கேள்விகளும்
எலியாஸ் ருக்லாவுக்கு எழும் சந்தேகங்களும் நமக்கொரு பெருமிதமான இலக்கிய அனுபவத்தை அளிக்கிறது.எலியாஸ் ருக்லாவின் பிரிக்க முடியாத உடலியாக இருக்கும் அவரது நண்பர் அவரின் மனைவி எலியாஸ் ருக்லா வின் மனைவியாக வாழ வந்து ( அவர் பிரிந்து சென்வுடன்) நார்வே உலகின் பேரழகியான ஏவா லிண்டே வுடன் வாழ எலியாஸ் ருக்லாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
மாணவர்களுக்கு 25ஆண்டுகளாக இலக்கிய பாடமெடுப்பதும் மாணவர்களின் ஈடுபாடின்மையும் ஒருநாள் பள்ளியில் குடையை உடைக்க வைத்து பைத்தியத்தை போல எலியாஸ் ருக்லாவை நகர வீதிகளில் அலைய வைக்கும் அலைதலின் மனவோட்டத்தில் நம்மையும் நார்வேஜிய இலக்கியத்திற்குள்ளும் மேட்டுக்குடி கடன் அடிமைகளின் வாழ்வையும் சித்தரித்தாலும் ஏவா லிண்டேவின் மீந்திருக்கும் அல்லது தேய்ந்து போன அழகு தான் ஆழ் மனதில் பெரும்தொந்தரவாகி அவரது இருப்பை அன்பு நேசம் பாலுறவில் மகிழ்ச்சி இருந்தாலும் மாணவர்களின் ஈடுபாடுன்மையை விட ஏவா லிண்டேவின் தேய்ந்து போன அழகும் பொருட்கள் மீதான வளர்ந்து வரும் அவளின் பேராசையும் தான் உள் நாதமாக எலியாஸ் ருக்லாவுக்கு சௌகர்யமான வாழ்வை அழித்துக் கொள்ளும் இருத்தலியல் சிக்கலை அளித்தாலும்.ஏவா லிண்டேவின் அகக் குரல் வழியே சற்றேனும் நாவல்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது வாசக அவா அல்லது நாவல் மீதான விமர்சனம்.
இவ்வாறாக ஒரு வாசக அவா எழ காரணம் ஐய்ரோப்பிய ஆண்கள் தங்கள் காதலிக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
பிறகு இடுப்பு பெருத்து விடுமா.. புட்டம் பெரிதாகி விடுமா என இளைமையிலேயே பெருங் கவலை படுபவர்கள்.அந்த பெருங் கவலையிலேயே வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களும் கூட.... 162 பக்க நாவலில் இலக்கிய விமர்சனம் தத்துவம் எளிய சித்தரிப்பின் மூலம் நார்வேயின் தலைநகர் ஆஸ்லோ விவரிக்காமலே பொலிவுறும் ஏவாவின் பேரழகு நான்கே மைய்ய கதாபாத்திரங்கள் மூலம் பல பாதைகளில் பயணிக்கும் அககுரல்களை எழுப்புகிறார் தாக் ஸூல்ஸ்தாத்.
இங்கே திண்டுகல் ஹாலோ பிளாக் சாலிட் பிளாக் தயாரிக்கும் நாவலாசிரியர்கள் வாசிக்க வேண்டிய படைப்பு.
கண் முன்னே வளர்ந்து இளைஞர்களாகிவிடும் குழந்தைகளை போல்தான் ஜீ.குப்புசாமி சின்ன கட்டுரைகளில் துவங்கி இன்று
நான் எப்போதும் பெருமிதம் கொள்ளும் மொழிபெயர்ப்பாளராக படைப்பாளியாக மின்னுகிறார். 662 நாட்கள் இந்த நாவலை மொழிபெயர்க்க உழைத்திருக்கிறார். அவருக்கு விலைமதிப்பற்ற என் முத்தங்கள்.... அவரின் எல்லா பெயர்ப்பு களையும் வாசித்திருக்கிறேன் என்பதே( அருந்தி ராயின் ஆஸாதி மட்டும் இன்னும் கிடைக்கவில்லை) அவர் மீதான என் நேசம்.
ஜீ.குப்புசாமி தாக் ஸூல்ஸ்தாத் தை நார்வேயின் மௌனி என்று குறிப்பிடுகிறார்.அவர் மௌனியா நகுலனா என்பது வாசிப்பு தேடலாக விரியும்.
ஜீ.கே.வின் Kuppuswamy Ganesan பெயர்ப்பில் உடைந்த குடை இனி அதை ஒன்றும் செய்ய முடியாதென்கிறபடி பட்டை தீட்டப்பட்ட வைரம்