Your cart is empty.
None
அரபு நாடுகளில் பிழைக்கும் நம் எளிய உழைப்பாளர்களின் வாழ்வை மிக நுட்பமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் சித்தரிக்கும் சிறப்பான நாவல். Gulf நாடுகளில் பணிபுரியும் இந்தியரகளின் குறிப்பாக தமிழர்களின் தனிமை, குடும்பப் பிரிவு, கனவுகளின் சிதைவு ஆகியவற்றை யதார்த்தமாகவும்,ஆவணமாகவும், நுட்பமான அரசியல் பார்வையாகவும் காட்டுகிறது.
யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்த எழுத்து படிக்கும் போது சிரிப்பையும் சோகத்தையும் ஓருசேர ஒரு cinema பாணியில் தருகிறது. ஆருஷா போன்ற கதாபாத்திரங்கள் நம் மனதில் பைசலின் குற்ற உணர்ச்சியை நமதுடையதாகவே உணரச்செய்கிறது.
மதவெறி, தீவிரவாதம் என்று ஊடகங்கள் காட்டும் பிம்பத்துக்கு எதிராக எளிய இஸ்லாமிய மக்களின் அன்றாட வாழ்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ் நாவல்களில் மிக முக்கியமான, வாசிக்கபட வேண்டிய புத்தகங்களில் ஒன்று.