Your cart is empty.
22 Feb 2026
ஒரு குடும்பத்தின் சமநிலை பாதிக்கபடும்போது அதை சரிசெய்ய நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?
காச்சர் கோச்சர் -அமைதியாக ஆரம்பித்து, ஆர்பாட்டமின்றி உள்நழைந்து உங்களை ஆக்கிரமிக்கும் நாவல். இதில் திடீர் திருப்பங்களோ, வாசகரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றே திணிக்கப்பட்ட விறுவிறுப்பான எழுத்துநடையோ இல்லை. மாறாக ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்ததின் வாழ்வுமுறையையும், வளம் பெருகியதும் அந்த வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் அருகாமையில்அமர்ந்து பார்ப்பது போன்றதொரு அனுபவத்தை தருகிறது. நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களை மட்டும் பேசாமல் அதன் அன்றாடங்களில் ஒளிந்திருக்கும் அழகியலையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்த புத்தகத்தின் தனித்தன்மையே அதன் நிதானமான எழத்துநடைதான் ,Slowburn என சொல்வார்களே அந்த வகையான கதை உங்களை ஆட்கொண்டு உரைந்து போக செய்துவிடும். (Literally i sat staring at the wall for 30 mins straight after completing this book, no exaggeration.) கதையின் நாயகன் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களின் நியாய தர்மங்களை சரியாக கணிக்கிறானே தவிர கருத்து சொல்ல முற்படவில்லை . அந்த மௌனமே இந்த நாவலின் மிகக் கடுமையான குற்றச்சாட்டு. குடும்பத்தை கட்டி காக்க ஆதாரமாய் விளங்கும் உறவுகளின் பிணைப்பு அதை காரணம்காட்டியே நேர்மை, அறம், ஒழுக்கம் ஆகியவற்றை மீறுவதை நியாயபடுத்துவதும் அதை யாருமே கண்டுகொள்ளாமல் நகர்வதும் இந்த புத்தகம் தந்த முக்கியமான takeaway. புத்தகத்தின் தொடக்கத்திற்கும் முடிவிற்குமான தூரம் சிறிதாக இருந்தாலும் அது ஏற்படுத்தும் உணர்வுகள் நிச்சயம் நேரெதிராகத்தான் இருக்கும். அச்சமயம் இந்த தலைப்பின் அர்த்தத்தை மிக ஆழமாகவே உணர்வீர்கள்.
ஒரு கோப்பை காஃபி தரும் புத்துணர்ச்சியையும் பரவசத்தையும் தாண்டி அடிநாக்கில் அதன் கசப்பும் தங்கி விடும் - அதுபோலத்தான் வாழ்விலும் சில உண்மைகள் கசக்கும். இது என் கருத்து. இந்த கதையில் வரும் வின்செண்ட் ( என்னை பொருத்த வரை Godsent, அசரீரி, நம் மனசாட்சி) சொல்வதுபோல் ஒரு கதைக்கு பல பரிமாணங்கள் இருக்கும்.உங்கள் கருத்தை படித்து விட்டு பகிருங்கள்.