Your cart is empty.

ஆர். சிவகுமார்
பிறப்பு: 1951
மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1970களின் பிற்பகுதி தொடங்கி இவருடைய மொழிபெயர்ப்புகள் சிறுபத்திரிகைகளில் வெளியாகிவருகின்றன. சில லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், ‘உருமாற்றம்’ (காஃப்கா), ‘பிறமொழிக் கதைகள்’, பின் நவீனத்துவக் கோட்பாடு குறித்த சில கட்டுரைகள், ‘பதேர் பாஞ்சாலி’ (திரைக்கதை), ‘இலக்கியக் கோட்பாடு’ (ஜானதன் கல்லர்), சோஃபியின் உலகம் (யொஸ்டைன் கார்டெர்), மார்க்ஸின் ஆவி (சார்ல்ஸ் டார்பர்) ஆகியவை இவருடைய மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை. சங்கப் பாடல்கள் சிலவற்றையும், நகுலனின் சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அந்த நாளின் கசடுகள்
துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான ப மேலும்
வசை மண்
அயர்லாந்து எழுத்தாளரான மார்ட்டீன் ஓ’ கைனின் ‘வசை மண்’ நாவல் நவீன ஐரிஷ் இலக்கியத்தின் ‘கிளாசிக்’கா மேலும்
சோஃபியின் உலகம்
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும மேலும்