Your cart is empty.
ப்ளக் ப்ளக் ப்ளக்
கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல. காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல், கவிதை நகர்கிறது. கற்பனையாக, காட்சியாக, மனசாட்சியாக, தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக, குற்ற உணர்வாக! உருவகமாகவும் படிமமாகவும் அமையும் இக்கவிதைகள், எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன, எளிமையாகவும் பூடகமாகவும். கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள்.