Your cart is empty.
எது நிற்கும்
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தமிழ் கிளாசிக் சிறுகதை |
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று. இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு.
கரிச்சான் குஞ்சு
கரிச்சான்குஞ்சு (பி. 1919 - 1992) கரிச்சான்குஞ்சு என்ற புனைபெயருடைய ஆர். நாராயணசாமி 10.7.1919இல் அன்றைய தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். 1940இல் ஏகாந்தி என்ற புனைபெயரில் எழுதிய முதல் சிறுகதையான ‘மலர்ச்சி’ கலைமகளில் வெளிவந்தது. கு.ப.ராவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தவர். அப்போது கரிச்சான் என்ற புனைபெயரில் எழுதிவந்த கு.ப.ரா.மீது கொண்ட அன்பினால் கரிச்சான்குஞ்சு என்ற புனைபெயரில் எழுதலானார். பெங்களூரில் எட்டு வயதுமுதல் பதினைந்து வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். மதுரை - ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் பதினேழு வயது முதல் இருபத்திரண்டு வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். சென்னை, மன்னார்குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சில குறுநாவல்களையும் எழுதியுள்ளார். எட்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. ‘கு.ப.ரா.’ (1990), ‘பாரதி தேடியதும் கண்டதும்’ (1982) ஆகியவை இவரது கட்டுரை நூல்கள். இவர் எழுதிய ஒரே நாவல் ‘பசித்த மானிடம்’ (1978). நாடகங்களையும் எழுதியுள்ள இவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி மொழிகளிலிருந்து சில முக்கிய நூல்களைத் தமிழாக்கியுள்ளார். ராமாமிருத சாஸ்திரிக்கும் ஈஸ்வரியம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்த கரிச்சான்குஞ்சுவுக்கு ஒரு அக்கா (ராஜலக்ஷ்மி), இரு தங்கைகள் (ருக்மணி, நாகராஜம்), ஒரு தம்பி (சுந்தர்ராமன்). முதல் மனைவி வாலாம்பாள் இறந்ததும் தற்போது சென்னையில் வசித்துவரும் சாரதாவை 1946இல் மணந்தார். இவருக்கு நான்கு மகள்கள் - லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா.
ISBN : 9789381969885
SIZE : 14.0 X 1.1 X 21.5 cm
WEIGHT : 265.0 grams
Karichan kunju, well remembered for his novel Pasitha Maanidam has contributed much for Short stories also. These short stories reveal themselves in different planes as philosophy, social criticism, puzzling life and form an important dimension in Tamil literature.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்














