-தமிழ் மக்கள் திரளைப் போல சினிமாவை வழிபடும் கூட்டம் வேறில்லை. அவர்களது அந்தரங்கத்திலும் பொதுப் புழக்கத்திலும் திரைப்படம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது; ஏற்படுத்திவருகிறது.
சி னிமாவைக் கலையாகவும் கலாச்சார நிகழ்வாகவும் ஆவணப்படுத்தி வைக்கும் அரிய செயலை இந்த நூல் மேற்கொண்டிருக்கிறது. திரைப்படத்தைப் பண்பாட்டு அடையாளம் என்ற வகையில் வரலாற்றுப் பார்வையுடனும் நம்பகமான தரவுகளின் துணையுடனும் ஆவணப்படுத்துகிறது. சினிமாவின் வரலாற்றை மட்டுமல்ல ஒரு காலகட்டத்தின் தமிழ்ச் சமூக வாழ்கையையும் பாதுகாத்து அளிக்கிறது இந்த நூல்.