Your cart is empty.
சிவாலய ஓட்டம்
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் … மேலும்
சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோவில்களின் சமூகப் பின்னணியையும் கலைநுட்பங்களையும் விவரிப்பது இந்நூலின் சிறப்பு. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு யாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது.
ISBN : 9789380240640
SIZE : 14.1 X 1.3 X 21.4 cm
WEIGHT : 280.0 grams
சித்ரா பாலசுப்பிரமணியன்
26 Feb 2025
சிவாலய ஓட்டம் நூலைப் பற்றி சித்ரா பாலசுப்பிரமணியன்
அ.கா. பெருமாள் அவர்களின் அபார உழைப்பு இப்புத்தகம்.
சிவராத்திரி அன்று பக்தர்கள் 108 கி.மீ தொலைவு நடந்து சென்று பன்னிரெண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வு சிவாலய ஓட்டம் எனப்படுகிறது. கன்யாகுமரி மாவட்டத்திற்கே உரிய சிறப்பான யாத்திரை நிகழ்வு இது.
முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன் மனை, திருப்பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்காடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, நட்டாலம் கோயில் ஆகியன அப்பன்னிரெண்டு கோயில்கள்.
கோயில்கள் குறித்த செய்திகள், கல்வெட்டு செப்பேடு செய்திகள், வாய்மொழி வரலாற்றுத் தகவல்கள், புகைப்படங்கள் என முக்கியமான தரவுகளை அ.கா. பெருமாள் தொகுத்துத் தந்திருக்கிறார்.
தமிழில் வந்துள்ள முக்கியமான கலாச்சார ஆவணம் இப்புத்தகம்.
The ritual running of the devotees to various Siva temples during the Sivarathri night are detailed in this book.














