Your cart is empty.
பி.எல். சாமி
பிறப்பு: 1925
தமிழறிஞர் பி.எல். சாமியின் பூர்வீகம் சிவகங்கை. திண்டிவனம், கடலூரில் பள்ளிக் கல்வியையும் திருச்சி தூய வளனார் கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் நிறைவு செய்தார். பின்னர் மத்திய அரசின் சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றினார்.
இளம்வயதிலேயே தீவிரமான தமிழார்வமுடைய இவர் சங்க இலக்கியத்தைப் பேரார்வத்துடன் பயின்று பின்னர் தமிழ் ஆய்வில் தோய்ந்தார். சங்க இலக்கியங்களின் அடிப்படையில் பல முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.

