Your cart is empty.
11 Oct 2025
ஜெயகாந்தன் எழுத்து என்றால் அது வெறும் கதை அல்ல — அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து அவர் கூறும் உண்மைகள் எவ்வளவு ஆழமானவை! ❤️
ஒவ்வொரு வரியும் நம்மை சிந்திக்க வைக்கும் — வீடு என்பதென்ன, உறவு என்பதென்ன, மனிதன் என்பதென்ன என்பதை. சுவர் கட்டினாலே வீடு இல்லை; புரிதலும், கருணையும் தான் ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.
ஜெயகாந்தனின் எழுத்து எப்போதும் மனித மனதின் ஆழத்தைத் தொட்டுப் பேசும். “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” என்ற இந்த நாவலில் அவர் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் சமூகத்தின் சிக்கலான உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
வீடு என்பது சுவர்கள் அல்ல, அதை நிரப்பும் உணர்ச்சிகளும் உறவுகளும் தான் என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. 💫
வாழ்க்கையின் கடினமான தருணங்களிலும் மனிதனாக இருப்பதற்கான அர்த்தத்தை, மரியாதையையும் மனிதத்துவத்தையும் ஜெயகாந்தன் நம்முள் விதைக்கிறார்.
அவரின் மொழி எளிமையானது, ஆனால் ஒவ்வொரு வரியும் மனதைத் தொடும் ஆழமுடையது. இந்தப் புத்தகம் படித்த பிறகு நீண்ட நேரம் நம் மனதில் ஒலிக்கிறது — நம் வாழ்க்கையையும், நம்மைச் சுற்றியுள்ள
“எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?”
ஹென்றி, தேவராஜன், துறைக்கண்ணு, பேபி(பைத்தியக்காரி), அக்கம்மாள், இந்த கதாபாத்திரங்களை என்னால் நெஞ்சை விட்டு நீக்க முடியவில்லை.
ஜெயகாந்தனின் ஆகச்சிறந்த படைப்பு இதுவே என்று சொல்லும் அளவிற்கு இந்த புத்தகம் இருந்தது.
நிச்சயம் வாசித்து மகிழுங்கள். Rating ⭐ ⭐ ⭐ ⭐ ⭐