Your cart is empty.
கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்
-காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த … மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 180.00
-காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது.
மரண தண்டனையோ கொலைத் தாக்குதலோ சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மையமான கருத்துச் சுதந்திரத்தை எவ்வித சமரசத்துக்கும் ஆளாக்கவில்லை என்பதைப் பதிவுசெய்கிறது இந்தக் கலை, இலக்கிய ஆவணம்.
புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையேயான கோட்டை அநாயாசமாக அழிக்கும் நடையும் படிமங்களும் கொண்ட இந்தத் தன்வரலாற்றுப் பிரதி நம்பகமான தமிழ் வடிவத்தில் உருமாறியுள்ளது.
ISBN : 9789361109270
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 270.0 grams
ஷங்கர்ராமசுப்ரமணியன்
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சிப் பொழுதுகளின் உச்சத்தில் சல்மான் ருஷ்டி கொலைத் தாக்குதலுக்குள்ளாகி, தப்பிக்கும் நினைவுகளைப் பகிரும் புத்தகம் இது.
அவரைக் கொலைசெய்ய முயன்ற கொலையாளியைப் போலவே, நமக்கும் ‘கத்தி’ மிக அந்தரங்கமான நூல்.”
நன்றி: ஷங்கர்ராமசுப்ரமணியன் (அகழ் இணைய இதழ்)
முழுக் கட்டுரையையும் வாசிக்க:
https://akazhonline.com/?p=9465...
வருணன் ஜோ
5 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
மதிப்புரை
‘துயரை எதிர்கொள்ளும் பிரதி’
…முப்பத்துமூன்று ஆண்டுகள் அவர் உள்ளூற எதிர்பார்த்து பயந்த அத்தருணம் ஆகஸ்ட் 22, 2022 அன்று ஒரு கருத்தரங்க மேடையில் ஒரு கத்தியின் வடிவில், அதை ஏந்தியிருந்த ஒரு அடிப்படைவாத இளம் மூர்க்கனின் கரங்களின் மூலம் அவருக்கு வாய்த்தது… கொடூரமான அத்தாக்குதலில் இருந்து மிக மிக அதிர்ஷ்டவசமாக அவர், தனது இடது கண்ணைக் காவு கொடுத்து, உயிரை மீட்டுக் கொண்டார். இந்த அனுபவப் எழுத்தின் வழியாக ஒரு கொலை முயற்சிக்குப் பிறகான தனது சிந்தனைகளை, தனக்குள்ளாகவே தொகுத்து, நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
…இப்பிரதியை எழுதியதே அவரது தனிப்பட்ட வாழ்வில் துயர் கடத்தல் மற்றும் அதன் நீட்சியாக இயல்புக்கு மீளல் என்பதான செயல்பாடுதான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரே நேரத்தில் இப்படைப்பு தனி மனிதனாக பாதிக்கபட்ட ஒருவரது பகிர்வாகவும், உலகெங்கிலும் அதிகாரத்தாலும் அடிப்படைவாதத்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிற எழுத்தாளர்களுக்கான ஆதரவுக் குரலாகவும் எழுகிறது…
…இந்த ஆண்டில் ரசித்து வாசித்த படைப்புகளில் ஒன்றாக ‘கத்தி’ இருக்கிறது.
நன்றி: வருணன் ஜோ (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=26719397507647690&id=100000124107141&rdid=9LbKfykAQDYVka4y#













