Your cart is empty.


மணல்
மேலும்
அசோகமித்திரனின் புனைவுகளில் அதிகம் காணக்கூடிய நகர்ப்புறக் கீழ்மட்ட நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதை இது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சுபாவங்கள், உணர்வுகள், அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள், கூட்டாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவை உருக்கொள்ளும் விதங்கள், உருமாறும் விதங்கள் ஆகியவற்றை அசோகமித்திரன் சிக்கனமான சொற்களில் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். அந்தக் குடும்பத்தினரின் அக, புற வாழ்வை நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வை அவருடைய எழுத்து தருகிறது.
பிரச்சினைகளின் ஊற்றுக்கண்களையோ தீர்வுகளையோ அசோகமித்திரன் கூறுவதில்லை. அசலான இயல்புகளுடன் கதை மாந்தர்களை நம் கண்முன் நிறுத்துகிறார். அதன்மூலம் அவர்களை நம்மால் நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தோடு மானசீகமாக இணைந்துகொள்ள முடிகிறது.
இந்தியச் சமூகத்தின் மரபார்ந்த வாழ்வின் அடிப்படைகளை நவீன வாழ்வு மாற்றிவிட்டது. இந்த மாற்றத்திற்கேற்ற தகவமைப்பு போதியளவு நடைபெறாத காலகட்டத்தின் திணறலை மணலின் சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
ISBN : 9789386820075
SIZE : 12.2 X 0.5 X 18.0 cm
WEIGHT : 89.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூக மேலும்
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்