Your cart is empty.


சகீனாவின் முத்தம்
மனிதன்மேலும்
மனிதன் கடந்த கால, எதிர்கால சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைந்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத்தின் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடந்துபோன நிகழ்வுகளிலிருந்து கற்ற சின்னச் சின்ன அனுபவங்கள், பாடங்கள் நம் எதிர்கால, நிகழ்கால நடப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
முடிச்சுக்கள் நிறைந்த சிக்கலான மாறுபட்ட ரகசிய மனம் கொண்ட முகங்கள் இங்கே பேசுகின்றன. வாழ்க்கையின் பல தரிசனங்களை நிரூபித்துக்கொண்டே எளிமையான விவரங்களுடன் சிக்கலான கதையொன்று தோன்றியுள்ளது.
முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ளும் முயற்சியில் வெங்கடரமணன் சனாதனத் தன்மையை மூடிமறைக்கத் தெரியாமல் திறந்துவைக்கிறான். இப்படிப் பல நுட்பங்களை இந்தப் புனைவு விரிவாகத் திறந்து காட்டுகிறது.
பல நினைவுகளிலிருந்து பொறுக்கி எடுத்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு கதை நாயகனின் தனிமொழிச் சுகத்தின் வழியாக விரிந்துகொண்டே போகும் புனைவு, சிறப்பான பாணியில் வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
ISBN : 9788196058906
SIZE : 141.0 X 12.0 X 218.0 cm
WEIGHT : 150.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பருவநிலை மாற்றம்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,
கல்லூரி மாணவர்களும மேலும்
வெட்டுக்கிளிப் பெண்
-பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும்
‘வெட்டுக்கிளிப் ப மேலும்
அபராஜிதன்
-இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு
வந்திருக்கவில்லை. போர் உச்சம் மேலும்
மகாபாரதம்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார் மேலும்
அறவி
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள்
பொருத்திப் பார்த்தால் துறவின மேலும்
நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
-மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன
என்பதை ‘நள்ளிரவும் பகல் வெ மேலும்