Your cart is empty.
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் | முழுத்தொகுப்பு |
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. பின்னுரையில் அரவிந்தன்
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788190464741
SIZE : 14.0 X 4.6 X 21.5 cm
WEIGHT : 1003.0 grams
இளங்கோ (முகநூல் பதிவு)
1 Feb 2026
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) – ஒரு பார்வை
“கலையின் மீது கொண்ட தீராத விருப்பம்”
“தமது கடைசிக்காலம்வரை எழுத்தின் வழி வாழ்வின் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருந்தவர்கள் என அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தாம் காலமாகும் கடைசிக்காலம்வரை எழுத மட்டுமில்லை, கதைகளில் நீர்த்துப் போகாமலும் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இன்னும் முக்கியமானது. வாழ்க்கை அவர்கள்மீது எவ்வளவு சலிப்பைக் கொட்டினாலும், அவர்கள் கலையின் மீது கொண்ட தீராத விருப்பால் மட்டும் அது நிகழ்ந்திருக்கச் சாத்தியம் இருக்கின்றது.”
நன்றி: இளங்கோ (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க:
Complete collection of Su.Raa’s Short Stories. Reading Su.Raa’s stories gives a rare and troublesome experience. The contribution of a writer is to improve the relation between life, time, language and ourself. These stories fulfill it in a perfect way.














