Your cart is empty.
மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி, பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘யங் இந்தியா’, ‘நவஜீவன்’ இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார்; பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். பாரதி பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார். இந்த வரலாற்றை விரிவாகத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்திற்குக் கையளிக்கின்றது இந்நூல்.
ISBN : 9789355231871
SIZE : 13.9 X 1.1 X 21.5 cm
WEIGHT : 235.0 grams
பெருமாள்முருகன்
24 Sep 2024
பாரதியும் காந்தியும்
நூல் பற்றி பெருமாள்முருகன்
“பாரதி பற்றிய ஆய்வில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் தொகுப்பு நூலாக இது விளங்குகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான இந்நூல் இப்போது ஐந்தாம் பதிப்பைக் கண்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் புதியவற்றை நூலாசிரியர் சேர்த்துக் கொண்டே உள்ளார். பாரதி எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று, 1921இல் தம் ஈரோட்டில் நிகழ்த்திய கடைசிச் சொற்பொழிவுக்கு முன் திருவண்ணாமலையில் அவர் ஆற்றிய உரை ஆகியவை அடுத்தடுத்த பதிப்புகளில் சேர்ந்துள்ளன.”
முழுக் கட்டுரையையும் படிக்க: https://shorturl.at/ImQX7














