Your cart is empty.
புலிநகக் கொன்றை
தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை இந்த நாவலின் பக்கங்களில் விரிகிறது. அகண்ட காலப் பரப்பிற்கேற்ற விரிவும் நுணுக்கமான கதையடுக்குகளும் கொண்ட நாவல் இது. ஏதோ ஒரு சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்துகிறதோ என்னும் ஐயமே இந்தக் கதையின் கண்ணுக்குத் தெரியாத பின்புலமாகப் படர்ந்து நிற்கிறது. அங்கதம் இழையோடும் சரளமான நடையில் நுட்பங்கள் கூடிய விவரணையுடன் அனாயசமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார் பி.ஏ. கிருஷ்ணன்.











