Your cart is empty.
ஜெர்மன் தமிழியல்
தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள். ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்ப அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தி பயன்படுத்தினர். அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று, எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர். இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை; மாபெரும் புரட்சி. அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கின்றது.











