Your cart is empty.
கண்ணாடி சத்தம்
உருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் கவிதைகளின் இயக்கம்.
புதிய தலைமுறைக் கவிஞர்களில் தனதான குரலும் பொருளும் கொண்ட செல்வசங்கரனின் ஐந்தாவது தொகுப்பு ‘கண்ணாடி சத்தம்.’











