Your cart is empty.
 
                
                    
                         
                
            
        
    இன்று
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் … மேலும்
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் தாண்டியும் பயணிக்கிறது. சமகாலத்து நிகழ்வுகளுக்கான மனிதர்களின் எதிர்வினைகளை நுட்பமாகப் பதிவுசெய்யும் இந்த நாவல், வாழ்வின் அடிப்படையான அம்சங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. லட்சிய வேகம், அர்ப்பணிப்பு மிகுந்த செயலூக்கம், தத்துவத் தேடல் ஆகியவற்றின் பொருள் என்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்பித் தன் போக்கில் விடையையும் தருகிறது. வாழ்வனுபவங்கள், கருத்து நிலைப்பாடுகள், தத்துவ விசாரங்கள், லட்சிய உணர்வு கொண்ட செயல்பாடுகள் ஆகியவற்றின் சித்திரங்களாக உருக்கொள்ளும் இந்த நாவல் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு என்னும் மயக்கத்தைத் தரக்கூடியது. இந்தச் சித்திரங்களின் அடிச்சரடைக் கண்டடையும் வாசகர் நாவலுக்குரிய தரிசனத்தையும் அதில் அடையாளம் காண முடியும். தமிழ் நாவல் வடிவத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்திய வெற்றிகரமான பரிசோதனைகளில் ஒன்று என இந்நாவலைத் தயங்காமல் சொல்லலாம். வடிவ ரீதியில் மட்டுமல்லாமல், பேசப்படும் பொருள் சார்ந்தும் தன் முக்கியத்துவத்தைக் கால ஓட்டத்தில் சற்றும் இழக்காத நாவல் இது. எழுதப்பட்ட காலத்தின் சமகாலம் என்பது, வாசிக்கப்படும் காலத்தின் சமகாலமாகவும் தோற்றம் கொள்ளக்கூடிய ரஸவாதம் அசோகமித்திரனின் கலையால் சாத்தியமாகியிருக்கிறது.
அசோகமித்திரன்
இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார் மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப் பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789388631013
SIZE : 13.8 X 0.4 X 21.5 cm
WEIGHT : 121.0 grams
Indru or Today is a novel that broke the template format Tamil novels were stuck with. On the form, the topic it discusses the novel is still relevant. Written by legendary Tamil writer Ashokamitran, the novel is a collection of individual narratives on the background of Emergency. From the common time period of Emergency, the narratives move past that and paint detailed images of a philosophical search, meaning of life and present us with different answers. In Ashokamitran’s magic, the time period of the novel, also reflects the reader’s present.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்
 
										 
									 
		














 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		 
																		