Your cart is empty.


சேவல்களம்
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான … மேலும்
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது.
பாலகுமார் விஜயராமன்
பாலகுமார் விஜயராமன் (பி. 1980) மதுரையைச் சேர்ந்தவர், ஓசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்புப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் - தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைத் தொகுப்பு: ‘புறாக்காரர் வீடு’, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’, ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘ஹௌல் மற்றும் சில கவிதைகள்’, சூழலியல் சார்ந்த ‘கடவுளின் பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய மொழியாக்கப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். ‘சேவல்களம்’ இவரது முதல் நாவல். பாலகுமார், தனது ‘தென்திசை’ (thendhisai.blogspot.in) வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
ISBN : 9789388631020
SIZE : 13.9 X 1.0 X 21.5 cm
WEIGHT : 227.0 grams
The number of novels based on traditional Tamil sports are very few. Sevalkalam, is one such novel, based on Sevalkattu or rooster fight, a Tamil sport with long historical records. Written in a lively spoken Tamil, the novel weaves the sport and equally interesting life events together. The novel also shines in celebrating the innate goodness of its characters, which is a relief in our times.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்