Your cart is empty.


தமிழ் நாவல் இலக்கியம்
இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல் என்ற வகையில் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய … மேலும்
இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான தத்துவார்த்த நூல் என்ற வகையில் கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களில் சிறப்பிடம் பெறுகின்றது. எம்.ஏ. நுஃமான் தமிழுக்குள் நாவல் புதிதாகப் புகுந்தது; எழுத்தறிவுப் பரவலையொட்டி வளர்ந்தது; இலக்கியமா இல்லையா என்னும் விவாதத்தில் சிக்கி நிலைபெற்றது. தோன்றி அரை நூற்றாண்டு கடந்தும் தமிழ் உயர்கல்வியுலகம் நாவலை எதிர்கொள்ளத் தடுமாறியது. இத்தகு சூழலில் கலாநிதி க. கைலாசபதி வரலாறும் திறனாய்வும் கலந்த நோக்கில் 1950களில் தமிழ் நாவல்களைக் கண்டு காட்ட முற்பட்டார். தொடர்ந்து அவர் எழுத நேர்ந்த பிற கட்டுரைகளும் சேர்ந்து ‘தமிழ் நாவல் இலக்கியம் - திறனாய்வுக் கட்டுரைகள்’ என இந்நூல் உருப்பெற்றது. நெடுங்கதையாயினும், நாவல் காப்பியத்திலிருந்து வேறுபட்டது; புனைகதையாயினும், சிறுகதையிலிருந்து வேறுபட்டது; பெரிதும் யதார்த்தவாதம் சார்ந்தது; இயற்பண்புவாத இடையீடு கொண்டது என இந்நூல் விளக்குகிறது. தமிழ்நாவல் வரலாற்றுப் போக்கில் தழுவல்களின் பின்னணியையும் தராதரத்தையும் இந்நூல் அலசுகிறது; 1960கள் வரையிலான தமிழ் நாவல் போக்கை மதிப்பிடுகிறது. கைலாசபதி அதுவரை வெளிவந்த குறிப்பிடத்தக்க பல நாவல்களைத் தமக்கேயுரிய நடையில் சரளமாகத் திறனாய்ந்து காட்டியிருப்பதைப் படிப்பது அறிவார்ந்த சுவை நல்கும் அனுபவமாகும். பா. மதிவாணன்
ISBN : 9789386820105
SIZE : 13.8 X 1.2 X 21.5 cm
WEIGHT : 300.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
தொல்காப்பியமும் அல் - கிதாப்பும்
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் மேலும்
சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித்திட்டம்
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான மேலும்
ந. பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்
பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித் மேலும்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந் மேலும்
மணல்மேல் கட்டிய பாலம்
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, கு மேலும்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதின மேலும்
திராவிடச் சான்று
1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன மேலும்
சமூகவியலும் இலக்கியமும்
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும்
மெட்ராஸ் 1726
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்
பாரதியின் இறுதிக்காலம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் மேலும்
பாரதி கவிஞனும் காப்புரிமையும்
‘வையகத்தீர், புதுமை காணீர்’ என்று பாடினான் பாரதி. 12 மார்ச் 1949இல் தமிழகச் சட்டமன்றத்தில் கல்வி மேலும்
ஆஷ் அடிச்சுவட்டில்
இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மேலும்