Your cart is empty.
ஜே.ஜே: சில குறிப்புகள்
தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியை ஜே.ஜேயின்
மூளைக்குள் தள்ளிவிட வேண்டும். அவன் எழுத்தில் நம்மைப்
பற்றி, நம் இலக்கியம் பற்றிக் குறிப்பே இல்லை. ஏன்? எதுவும்
அவனிடம் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | கிளாசிக் நாவல் | தமிழ் கிளாசிக் நாவல் |
தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியை ஜே.ஜேயின்
மூளைக்குள் தள்ளிவிட வேண்டும். அவன் எழுத்தில் நம்மைப்
பற்றி, நம் இலக்கியம் பற்றிக் குறிப்பே இல்லை. ஏன்? எதுவும்
அவனிடம் போய்ச்சேரவில்லையா? நடுவில் பாஷையின்
சுவர்கள். மனிதனைப் பிளவுபடுத்தும் சுவர்கள். உண்மையைச்
சார்ந்து நிற்க வேண்டிய மனிதனை, சத்தத்திற்கு அடிமைப்
படுத்திவிட்ட முடக் கருவி. அதை நொறுக்கி விடலாம்.
அறியவும் அறிவிக்கவும் மனிதன் கொள்ளும் பேராசையின் முன்
தூள்தூளாகப் பறந்துபோகும் அது. வள்ளுவனின், இளங்கோவின்,
கம்பனின், பாரதியின் அவகாசிகளை எப்படிக் கணக்கில்
எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்? உலக அரங்கில்
கவிதைச் சொத்தின் பெரும் செல்வந்தர்களை எப்படிப்
புறக்கணிக்க முடியும்? எல்லோருக்கும் நம்மீது அலட்சியம்
கவிந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தேன்.
அவர்களிடம் போய்ச்சேரும் தமிழ்ப் படங்கள். அவர்களுக்குப்
பார்க்கக் கிடைக்கும் நாடகங்கள்.
நம் அரசியல்வாதிகளின் வாள்வாள் கத்தல்கள். என்ன
நினைப்பார்கள் நம்மைப் பற்றி?
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
ISBN : 9788190080187
SIZE : 13.8 X 1.1 X 21.4 cm
WEIGHT : 258.0 grams
Rowdhira reads
11 Oct 2025
This new edition of the cult novel by Su.Ra. has many new drawings by Trotsky Maruthu.<\p>














