Your cart is empty.


சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா
இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய
கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு
வெளியானபோது அது … மேலும்
-எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா
இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய
கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு
வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே
புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும்
எதிர்கவிதைகளை உருவாக்கினார். தீவிரமான சொற்சிக்கனம் அமைந்த
இக்கவிதைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாயின.
எதிர்கவிதை எல்லாவிதமான கொள்கைப் பிடிவாதங்களுக்கும் எதிரானது
என்பது பர்ராவின் புரிதல். “ஒரேசமயத்தில் ஏற்புகளும் மறுப்புகளும்"
கலந்திருப்பதே எதிர்கவிஞரின் பாதை என்பது அவருக்கிருந்த தெளிவு.
பர்ராவின் பெரும் ரசிகரான பெருந்தேவி அவரது பல்வேறு தொகுப்புகளிலிருந்து
சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கவித்துவமும் தொனியும்
மாறாமல் தமிழாக்கியிருக்கிறார். தமிழில் பர்ராவையும் அவர் முன்னெடுத்த
எதிர்கவிதை அழகியலையும் சிறப்பாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு இது.
ISBN : 978-81-19034-39-0
SIZE : 13.8 X 0.5 X 21.7 cm
WEIGHT : 125.0 grams