Your cart is empty.
மஞ்சள் மகிமை
நீண்ட நெடிய தமிழ் மரபின் பரப்பில் ஒவ்வொரு சடங்கும் மானுட வரலாற்றைச் சுமந்து நிற்கிறது. இந்தச் சடங்குகளின் வழியே நிலைத்திருக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சியை நுணுகி ஆராய்ந்து, தத்துவம்போல் தரிசித்து, எளிய மொழியில் வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறார் தொ. பரமசிவன். தாலி, மஞ்சள், கோலம் என அனைத்திலும் புதிய பார்வையும் புதிய பொருளும் கொள்கிறார் தொ.ப. தமிழர்களின் அன்றாட வாழ்வில் இயல்பாகப் புழங்கும் மஞ்சளுக்குப் பின்னால் இத்தனை பண்பாட்டுக் கூறுகளும் பொருள்களும் இருக்கின்றனவா என்னும் வியப்பை ஏற்படுத்தும் இந்த நூல் மானுடவியல் பண்பாட்டுத் தேடலின் வெளிப்பாடு.











