Your cart is empty.
படைப்புக்கலை
படைப்புகள், படைப்பாளிகள், படைப்புச் சூழல் ஆகியவை பற்றி அசோகமித்திரன் தீவிரமாகவும் கூர்மையாகவும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மிகுதியும் தமிழ்ப் படைப்புகளைச் சார்ந்து பேசும் கட்டுரைகளுக்கிடையே உலக இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
படைப்பின் தரம், விமர்சனம், விமர்சனத்தைப் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் விதம், படைப்பின் மொழிநடை, கொச்சை வழக்கிற்கும் படைப்புக்கும் உள்ள உறவு, படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு அம்சங்களையும் நுட்பமாக விவாதிக்கிறார் அசோகமித்திரன். இலக்கியம், இலக்கியவாதிகள், மொழி ஆகியவை குறித்த அவரது கறாரான பார்வைகளை இக்கட்டுரைகளில் காணலாம்.
நல்ல கட்டுரையை எழுதி முடித்த பிறகு ஏற்படும் உணர்வு, “ஒரு நல்ல கதையை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மனநினைவுக்கும் சற்றும் குறைந்ததல்ல” என்கிறார் அசோகமித்திரன். இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இத்தகைய மனநிறைவை அவருக்கு அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.



















