Your cart is empty.
‘கிருஷ்ணப் பருந்து' நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் சிந்தனையின் நிழல் சற்று அழுத்தமாகவே விழுந்திருக்கிறது.
நாவலை நாம் படிக்கையில் அதன் மேல் தளம் ஒரு திசையில் நகர்வதைப் பார்க்கும் நாம், அதன் அடித்தளம் அதன் எதிர்த்திசையில் நகர்வதை உணரலாம். ஒரே சமயத்தில் இவ்வித இரண்டு இயக்கங்கள் சலிப்பதைச் செய்து காட்டுவது ஒரு ஆற்றல் என்றே நான் கருதுகிறேன். இங்குதான் கலாபூர்வமான வாழ்க்கைப் பிரதிபலிப்பே அதன் விமர்சனமாக மாறுகிறது.
ISBN : 9789355230904
SIZE : 13.3 X 0.7 X 21.7 cm
WEIGHT : 175.0 grams
நிஜந்தன் தோழன்
9 Dec 2025
ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ – தமிழ் கிளாசிக் நாவல்- வாசகப் பார்வை
குருஸ்வாமி என்ற சமூக அந்தஸ்து உள்ள ஒருவரை சார்ந்து வாழும் குடும்பங்களில் ஒன்று வேலப்பன், வேலப்பனுக்காக பெரிய வசதியையே குடும்பத்தையே புறக்கணித்து வரும் அவனின் மனைவி ராணி, இன்னும் சில கதாபாத்திரங்கள். இளமையிலியே மனைவியை இழந்து வாழும் குருஸ்வாமி காமத்தை தன்னுடைய அந்தஸ்த்துகாகவே அடக்கி வைக்கிறார். இது குறித்து முதல் பகுதியில் எங்குமே வார்த்தைகளால் நேரடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலுமே கதையின் போக்கில் புரிந்து கொள்ள முடியும்…
அடக்கிவைக்கப்பட்ட காமம் எதனால் நிகழ்கிறது. குறித்து 80களிலேயே ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் ஆ.மாதவன். எல்லாரும் ஏதோரு சமயத்திற்காக காத்திருக்கவே செய்கிறோம் அதில் காமம் அடர்த்தியானது.
நன்றி: நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:













